புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Presidential Update
By Mayuri Sep 23, 2024 12:41 PM GMT
Mayuri

Mayuri

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 MI 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் விமானியாகப் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புகளை பேணியமைக்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் | Appointment Of Secretaries By The New President

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW