அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு ஆதரவு

Anura Kumara Dissanayaka sriLankaelection2024 sriLankaelectionupdates
By Bavan Sep 08, 2024 11:55 AM GMT
Bavan

Bavan

Courtesy: Dharu

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கி வாக்களிக்க வேண்டும் என மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அமைப்பின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

மாற்று அரசியல் 

“வடக்கு கிழக்கில் தற்போது மக்கள் மத்தியில் மாற்று அரசியலை கொண்டு வரவேண்டிய தேவை இருக்கின்றது. அதனடிப்படையில் நாங்கள் தன்னொழிச்சியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு ஆதரவு | Anura Kumara Tamil People S Organization Support

நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஜே.வி.பி புரட்சியின் பின்னர் தமிழ் தேசிய போராட்டம் ஏற்பட்டது. இற்கு எல்லாம் இந்த நிர்வாககட்டமைப்பு (சிஸ்ரம்) தான் காரணம்.

எனவே இது மாற்றப்படவேண்டும். இந்த வாக்குவங்கி அரசியல் இலாபகரமான சூழலாக மாறியதுதான் காரணம் இதனை நாங்கள் தொடரமுடியாது.

இதனை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். பாரம்பெரிய அரசியலை தோற்கடிக்க இந்த ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை கொண்டுவரவேண்டும் அதற்காக வாக்களியுங்கள்” என்றார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW