மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு
Sri Lanka Police
Anuradhapura
Crime Branch Criminal Investigation Department
Crime
By Fathima
அநுராதபுரம் - பதவிய பிரதேசத்தில் 36 வயதுடைய ஒருவர் நேற்று (16.05.2023) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை மற்றும் மகன் மீது துப்பாக்கிச்சூடு
இதேவேளை வெலிகம பிரதேசத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்திருந்தார்.
வெலிகம - அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிட்டதெனிய பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் நாளாந்தம் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.