மாளிகைக்காடு பகுதியில் நடைபெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வு
மாளிகைக்காடு பிரதேசத்தில் பலம்வாய்ந்த விளையாட்டு கழகமான றியல் பவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அந்த கழகத்தின் தலைவர் தாணிஸ் ரஹ்மத்துல்லாவின் தலைமையில் அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மேல்மாடியில் ஞாயிற்றுக்கிழமை(17.04.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேக் ஏ. தெளபீக்(நளீமி) மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
இந்நிகழ்வில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் பைசர் ஹாஜியார், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மாஹிர், றியல் பவர் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் நாஸர், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் இம்தியாஸ், கழகத்தின் செயலாளர் சஜாத் மற்றும் உறுப்பினர்கள், அஹுவர் ஆசிரியர், பைசர் ஆசிரியர், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.