கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு (video)
கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் கல்விப்பணிமனை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற நோன்பின் மாண்புகளை பற்றி நேற்றைய தினம் (10.04.2023) மௌலவி எம்.எச்.றியால் (ஹாபீஸி) மார்க்க சொற்பொழிவொன்றை நிகழ்த்தியிருந்தார்.
குறித்த நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையிலான குழுவினரின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம்.வாஜித், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, உதவி ஆணையாளர் எம்.எஸ்.எம்.அஸீம், பொறியலாளர்கள், கணக்காளர்கள் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
ஓய்வு பெற்ற பிரதி மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்கள்வ மற்றும் வலய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளின் அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு படையினர், கல்முனை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், தவராசா கலையரசன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







