பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka University Grants Commission
By Mayuri Sep 05, 2024 02:48 AM GMT
Mayuri

Mayuri

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை

தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல் | Announcement Regarding University Cut Off

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW