அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government Gazette
By Fathima Dec 13, 2025 05:39 AM GMT
Fathima

Fathima

அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு வரை விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட முற்பணம் 

இந்த சுற்றறிக்கையின்படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Allowances For Government Employees

இந்த கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்த தொகை பத்து சமமான மாதாந்திர தவணைகளில் வசூலிக்கப்படும் என்றும், வருடாந்திர வட்டி 8 சதவீதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்த தவறிய எந்தவொரு அரசு அதிகாரிக்கும் இந்த கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.