நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்!

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Fathima Apr 17, 2023 11:45 AM GMT
Fathima

Fathima

நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் (17.04.2023) விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் படி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்! | And The Temperature Will Increase

வெளிப்புற தொழிலாளர்கள்

மேலும், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“வெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான செயற்பாடுகளைக் குறைக்கவும், நிழலைக் கண்டறியவும், நீரேற்றத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்! | And The Temperature Will Increase

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள்

அத்துடன், பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வெளியிடப் பயணங்களைத் தவிர்க்குமாறும் கூறியுள்ளது.

மேலும், தேவையான அளவு தண்ணீரை அருந்துவது மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் வானிலை ஆய்வாளர் மலிந்த மில்லங்கொட பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.