இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் முன்மாதிரி செயற்பாடுகள்

Sri Lanka Saudi Arabia
By Rakshana MA Jun 04, 2025 11:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள்.

செயலில் மட்டும் அல்ல, செயல்முறையிலும் மனிதநேயத்தைக் கொண்டு இந்த பணியை மிகுந்த அர்ப்பணிப்பு, நேர்மையுடன் நிறைவேற்றிக்கொண்டிருப்பவர்தான் இவர்கள்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், தனது சேவைக்காலத்திலே இலங்கையின் பல துறைகளில், குறிப்பாக சமூக நலன், கல்வி, பொருளாதாரம், பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான பணிகளில் அதிகமான அளவு தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை அடையும் நன்மை

இலங்கை - சவுதி உறவுகள் வலுப்பெறுவதற்கான தூணாக அவர் திகழ்வதுடன், இருநாடுகளுக்கிடையே உயர் மட்ட சந்திப்புகள், வர்த்தக ஒப்பந்தங்கள், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இலங்கை மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தந்திருக்கிறது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் முன்மாதிரி செயற்பாடுகள் | Ambassador Al Kahtani S Role In Srilanka Ties

இலங்கையின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ஹஜ் வழிப்பாட்டுக்காகச் சவுதிக்கு செல்லும் போது ஏற்படும் சவால்களை களத்தில் நின்று தீர்ப்பது மட்டுமல்லாமல், சக மத மக்களுக்கும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

சவூதி தூதுவர்

அவர் தனது சொல் மற்றும் செயல்களால், தூதுவர் என்பது அதிகாரத்தின் பிரதிநிதி மட்டுமல்ல, ஒரு அர்ப்பணிப்பு மிக்க மனித நேயத்தின் தூது என்பதைக் காட்டி நிற்கின்றார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் முன்மாதிரி செயற்பாடுகள் | Ambassador Al Kahtani S Role In Srilanka Ties

இன்றைய உலகில் சமாதானம், நம்பிக்கை, நட்பு போன்றவை மிக முக்கியமாக போற்றப்பட வேண்டிய நேரம் இது.

அத்தகைய சூழலில் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியின் சேவை ஒளிக்காற்றாகத் திகழ்கிறது. அவர் விதைக்கும் மனித நேயத்தின் விதைகள், நாளைய தலைமுறைகளுக்கும் நிச்சயமாக ஒரு ஒளி வீசும் வழிகாட்டியாக இருக்கும்.

புலைமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

புலைமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

மட்டக்களப்பில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 86 மாணவர்கள்

மட்டக்களப்பில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 86 மாணவர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW