மஹர பள்ளிவாசலை அமைக்க அரசு மாற்று காணி வழங்க வேண்டும்: சபையில் இம்ரான் எம்.பி. வேண்டுகோள்

Parliament of Sri Lanka Trincomalee Sri Lanka Politician Imran Maharoof
By Mubarak Jul 08, 2023 11:22 AM GMT
Mubarak

Mubarak

புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று (07.07.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்­சாலை வளாகத்தில் இருந்த பள்ளிவாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்றப்­பட்­டுள்ளது.

மஹர பள்ளிவாசலை அமைக்க அரசு மாற்று காணி வழங்க வேண்டும்: சபையில் இம்ரான் எம்.பி. வேண்டுகோள் | Alternative Land Mahara Mosque New Location

மஹர சிறைச்­சாலை பள்ளிவாசல்

நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்­மா­ணிக்க காணி துண்டொன்றை பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.

இது விடயமாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களமும் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலுவல்கள் அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் எம்.பி. சபையில் வலியுறுத்தினார்.