ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

13th amendment Sri Lankan Tamils Ranil Wickremesinghe Narendra Modi Sri Lankan political crisis
By Fathima Jul 26, 2023 07:15 AM GMT
Fathima

Fathima

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. 4

இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளிப்பார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் 

ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று | All Party Conference Today

கடந்த வாரம் ஜனாதிபதி விக்ரமசிங்க இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதை அடுத்து, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மற்றும் இரு தலைவர்களுக்கிடையிலான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

13 ஆம் திருத்தம் தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் ஒன்பது மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.

முன்னதாக தனது இந்திய விஜயத்திற்கு முன்னதாக, தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், மாகாண சபைகளில் காவல்துறை அதிகாரங்கள் இன்றி 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்  என விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.

எவ்வாறாயினும், அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளன.

அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு முன்னர் அரசாங்கம் உள்ளக உடன்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தற்போது சுயேச்சையாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கான விருப்பத்தை உறுதிப்படுத்தியுள்ளனர