ஜனாதிபதி ரணிலைப் போல் தகுதியுடைய வேறு யாரும் இல்லை

Ali Sabry
By Fathima Apr 13, 2023 09:01 AM GMT
Fathima

Fathima

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான திறமையான தலைவர் என தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது இதுவே முதல் தடவை எனவும், தான் முன்னர் எதிர் அணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் கைகோர்ப்பீர்களா என அமைச்சர் அலி சப்ரியிடம் வினவிய போது, ​​ஒரு அரசியல் கட்சியை மற்றொன்றிற்காக கைவிடும் வகை தாம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலைப் போல் தகுதியுடைய வேறு யாரும் இல்லை | Ali Sabry

எவ்வாறாயினும், இலங்கையின் தலைவராகத் தகுதியுடைய வேறு எவரையும் காண முடியாது.

தாம் முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான எதிர் அணியில் செயற்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் அவர் மீது தவறான அபிப்பிராயம் இருந்தமை தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.