புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

By Mayuri Nov 18, 2023 07:01 AM GMT
Mayuri

Mayuri

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சரிடம் விடுத்துள்ளனர்.

அதன்படி புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரியுள்ளார்.

புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை

அத்துடன் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை 20,000இல் இருந்து 30,000ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.