மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Eastern Province
By Rakshana MA May 29, 2025 04:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 5 மாதங்களில் ஏற்பட்ட வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கவலையான விடயத்தினை கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று புதன்கிழமை(28) இடம்பெற்றது 

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வீதி விபத்துக்கள் 

இங்கு அவர் மேலுத் கூறுகையில், இந்த விபத்துக்கள் மிகவும் கவலையானது எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாது பிரயாணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Accidents Report Batticaloa

கடந்த 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 611 வீதி விபத்தில் 72 பேர் உயிரிழந்ததுடன் 1975 பேர் மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25 ம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களுக்கு முதலாவது காரணம் வேகமாக வாகனங்களை செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே ஆகும்.

எனவே, மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர். சந்திவெளி, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

கடுமையாக வேண்டிய சட்டம் 

அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பயணிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Accidents Report Batticaloa

அதேபோல பலர் தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பிரயாணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது.

ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைக்கவசம் அணியுமாறு 7 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இல்லை எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் அரிசி தட்டுப்பாடு..வெளியான தகவல்

மீண்டும் அரிசி தட்டுப்பாடு..வெளியான தகவல்

பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் 

அதேவேளை இந்த குறித்த பிரதேசங்களில் வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸ்க்கு கட்டளையிட்டார்.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Accidents Report Batticaloa

இந்த வீதி பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போதும் பொதுமக்களின் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பு கூறவேண்டிய சிலர் வருகை தரவில்லை.

எனவே அடுத்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் வராத திணைக்கள மற்றும் தனியார் பேருந்து சங்கம், முச்சக்கரவண்டி சங்கங்கள், உட்பட்டவர்கள் வராத இடத்தில் அவர்களுக்கு எதிராக அந்த திணைக்கள செயலாளர்களுக்கு முறைப்பாடு செய்யப்படும் என்றார்.

அதேவேளை மாவட்டத்தில் பழுதடைந்த வீதிகள் மதகுகள், மற்றும் உடைந்துள்ள வடிகான் மூடிகள், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளமை, தலைக்கவசம் அணியாது பயணிப்பவர்கள் போன்றவை தொடர்பான குறைபாடுகளை காணொளி படங்கள் மூலமாக காட்சிப்படுத்தி அந்தந்த துறை சார்ந்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW