தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து
South Eastern University of Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Rakshana MA
உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(17) காலை அம்பாறை - கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
குடைசாய்ந்து விபத்து
குறித்த விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியன பகுதியளவில் சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறுவடைக்கான காலமாகையால், அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை, உழவு இயந்திரங்கள் மற்றும் இதர வாகனங்களில் மூலம் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

