யாழ். சாவகச்சேரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்

Sri Lanka Police Jaffna Hospitals in Sri Lanka Accident
By Fathima Apr 15, 2024 01:46 PM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது, நேற்று (14.04.2024) இரவு 8.30 மணியளவில் சாவகச்சேரி - கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார்சைக்கிளில் ஏற்றி வந்த நபர் மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டுள்ளார். 

மேலதிக சிகிச்சை

இதன்போது, பின்பக்கத்தில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சம்பவ இடத்தில் மது போத்தல்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.