அபுதாபியில் மூன்று குழந்தைகளும் மார்ச் பதினான்காம் தேதி பிறந்த அதிசயம்
Abu Dhabi
By Fathima
கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் மற்றும் ஹலீமா முஸ்தபா தம்பதியர் பணி நிமித்தமாக அபுதாபியில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு!! அதற்கென்ன?! என்கிறீர்களா!! அந்த மூன்று குழந்தைகளும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இடைவெளி விட்டு இவர்களுக்கு பிறந்துள்ளன.
அந்த மூன்று குழந்தைகளும் சரியாக மார்ச் பதினான்காம் தேதி பிறந்துள்ளது.
இந்த ஆச்சிர்யமான ஒற்றுமை எப்படி என இவர்களிடம் கேட்டால் புன்னகையுடன் அவர்கள் கூறும் பதில்...
"இதில் திட்டமிடல் எல்லாம் ஒன்றுமில்லை..! அல்லாஹ்வின் நாட்டப்படி இப்படி ஒரே தேதிகளில் பிறந்துள்ளது எனக் கூறி மனம் மகிழும் தம்பதிகள்.