யாழில் கூரிய ஆயுதத்தினால் கொலை செய்யப்பட்ட பெண்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 06, 2024 05:07 PM GMT
Harrish

Harrish

யாழ்ப்பாணத்தில்Jaffna)  இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் இன்று(06.07.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

சம்பவத்தில், திவிகரன் நிஷானி என்ற 29 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் கூரிய ஆயுதத்தினால் கொலை செய்யப்பட்ட பெண் | A Woman Killed By Knife Jaffna

மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்