கல்முனையில் பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!

Sri Lanka Police Ampara Crime Kalmunai
By Rakshana MA May 18, 2025 03:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை புற நகரப்பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

கல்முனையில் பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை! | A Sudden Raid Was Conducted In Kalmunai

இதன்போது கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான புற நகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதற்கமைய, இச்சோதனை நடவடிக்கையின் போது 82 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்

புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW      


GalleryGalleryGalleryGalleryGalleryGallery