கோரவிபத்து காவல்துறை உத்தியோகத்தர் பலி!-யாழ்

Sri Lanka Police Accident
By Nafeel Apr 20, 2023 02:29 AM GMT
Nafeel

Nafeel

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற கோரவிபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவரே உயிரிழந்வராவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.

இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.