கட்டுநாயக்காவில் இந்தியாவிலிருந்து வந்தவர் கைது!

Sri Lanka Police Sri Lanka
By Nafeel Apr 20, 2023 02:14 AM GMT
Nafeel

Nafeel

இந்தியாவிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 34 கிலோகிராம் எடையுள்ள 60,000 போதை மாத்திரைகளை கொண்டு வந்தவரையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திகன பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் 60,460 PREGAB 150 mg மாத்திரைகளை கெயா கலரிங் பொதிகளுக்குள் மறைத்து வைத்திருந்தார். சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.