பேலியகொடயில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 20, 2024 07:45 AM GMT
Laksi

Laksi

கொழும்பு, பேலியகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறி்த்த சம்பவமானது பேலியகொட பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

தனிப்பட்ட தகராறு

இதன்போது, உயிரிழந்தவர் களனி, நாரம்மினிய வீதியில் வசிக்கும் 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பேலியகொடயில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை | A Person Attacked Killed A Sharp Weapon Peliyakoda

அத்தோடு, குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக சிலரால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலதிக விசாரணை

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடயில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை | A Person Attacked Killed A Sharp Weapon Peliyakoda

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW