சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி

Ampara Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Aug 30, 2024 11:05 AM GMT
Laksi

Laksi

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரக்குற்றி விழுந்து ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கைர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மர ஆலையத்தில் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை இறக்கும் போதே குறித்த நபர்  மீது மரக்குற்றி விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

மேலதிக விசாரணை

 சம்பவத்தில் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ரசி குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி | A Man Died When A Tree Fell In Sammanthurai

குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் : முபாற‌க் பகிரங்கம்

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் : முபாற‌க் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW