யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Sep 09, 2024 11:00 PM GMT
Harrish

Harrish

யாழப்பாணத்தில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து நேற்று முன்தினம்(08.09.2024) மீட்கப்பட்டுள்ளது.

பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசார ஸ்டிக்கர்கள் தொடர்பில் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

தேர்தல் பிரசார ஸ்டிக்கர்கள் தொடர்பில் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

மேலதிக விசாரணை

குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை என்பதுடன் மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் உணவினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம் என்ற நிலையில், இவருக்கு வழமையாக உணவினை கொடுக்க பெண் நேற்று முன்தினம்(08) அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி | A Lawyer Rescued As A Dead Body Jaffna

இதன் பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம்

சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம்