முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 03, 2024 06:33 PM GMT
Harrish

Harrish

முல்லைத்தீவில்(Mullaitivu) இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று(03.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

முள்ளியவளை, தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மாமூலைப்பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி | A Girl Died Mullaitivu Accident

உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தினை செலுத்திய சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW