மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு
Ampara
Nuwara Eliya
Sri Lankan Peoples
Accident
By Rakshana MA
இலங்கையில் இரண்டு பகுதிகளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணும், கந்தபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
72 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உள்ள மின் விளக்கை மாற்ற முயன்றபோது மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பயிர்களைப் பாதுகாக்கப் பொருத்தப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின் கம்பியில் மோதியதில் அந்த 74 வயதுடைய நபர் இறந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |