இலங்கையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பான அறிவிப்பு
கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 550 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) தகவல் வெளியிட்டுள்ளது.
ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 120 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி
இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறிக்கிறது. அதன்படி, அதிகமான உயிரிழப்புகள் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட மின்கம்பிகள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
இவை பெரும்பாலும் பயிர்களை விலங்குகளிலிருந்து பாதுகாப்பதற்காக விலங்குகளை கொல்லும் நோக்கத்துடன் பதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இத்தகைய மின்கம்பிகள் மனித உயிருக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் ஆபத்து விளைவிப்பதாக ஆணையம் எச்சரிக்கிறது.
மின்சாரத்துடன் தொடர்புடைய எந்த செயல்களையும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களிடம் இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |