ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50 வீத வரி! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
"ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும்" எந்தவொரு நாட்டிலிருந்தும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் "எல்லாப் பொருட்களுக்கும்" 50% சுங்க வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்குவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு நாடும், எந்தவித விதிவிலக்குகள் இன்றி, உடனடியாக இந்த வரிக்கு உட்படுத்தப்படும் என்று ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியுள்ளார்.
“ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் ஒரு நாடு, அமெரிக்காவிற்கு விற்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உடனடியாக 50% வரி விதிக்கப்படுவது உடனடி நடைமுறைக்கு வருகிறது.
விதிவிலக்குகள் இல்லை
இதற்கு எந்த விதிவிலக்குகள் இல்லை! என கூறியுள்ளார்.

செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ட்ரம்ப் மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம் என்று வர்ணித்ததைத் தொடர்ந்து, ஈரான் அதிகாரிகளுடன் அமெரிக்கா நெருக்கமாகப் பணியாற்றும் என்று ட்ரம்ப் கூறிய நிலையில் குறித்த பதிவு வெளியாகியுள்ளது.
மேலும், யுரேனியம் செறிவூட்டல் எதுவும் நடைபெறாது என்றும், அமெரிக்க அமைதித் திட்ட முன்மொழிவுகளில் உள்ள 15 அம்சங்களில் பல ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டன என்றும் ட்ரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறினார்.
இதன்படி சுங்க வரிகள் மற்றும் தடைகளைத் தளர்த்துவது குறித்து அமெரிக்காவும் ஈரானும் விவாதிக்கும் என்று ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.