பாரிய பணமோசடி: யாழில் பெண் ஒருவர் கைது

Sri Lanka Police Jaffna Nothern Province
By Aadhithya Jul 01, 2024 10:07 AM GMT
Aadhithya

Aadhithya

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மானிப்பாய் (Manipay) பகுதியை சேர்ந்த குறித்த பெண் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இந்தநிலையில், நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

பாரிய பணமோசடி: யாழில் பெண் ஒருவர் கைது | 50 Lakh Scam In Jaffna Woman Arrested

இதனடிப்படையில்,  பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்