அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 30, 2024 06:25 AM GMT
Laksi

Laksi

அம்பாறை- பெரியநீலாவணை பகுதியில்  ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள நூல் கலரிடும் தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

மேலதிக நடவடிக்கை

நான்கு சந்தேகநபர்களும் இரவு நேரத்தில் தொழிற்சாலையில் யாருமில்லாத போது நீண்ட நாட்களாக ஐஸ் போதை பொருளை பயன்படுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது | 4 Youth Arrested In Ampara

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 20 வயதுடைய இருவரும் அத்தோடு 17 வயதுடைய இரண்டு பேர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW