அரசாங்க அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுகளை திறைசேரி வழங்கவில்லை

Sri Lanka Press Institute Government Employee Economy of Sri Lanka Election Sri Lankan local elections 2023
By Fathima Mar 26, 2023 02:31 PM GMT
Fathima

Fathima

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனவும் அதனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் திறைசேரியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களுக்காக அரசாங்க அச்சகம் இதுவரை 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.

அரசாங்க அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுகளை திறைசேரி வழங்கவில்லை | 4 Crore Treasury To Pay Government Press Employees

நிதிப் பிரச்சினை

இதேவேளை, நிதிப் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகம் முற்றாக நிறுத்தியுள்ளது.

எனவே வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணத்தை வழங்க முடியாது என திறைசேரி அண்மையில் அரசாங்க அச்சகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.