தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 26 வாகனங்கள் விபத்து
Sri Lanka Police
Southern Province
Accident
By Thahir
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏறக்குறைய 26 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (16.04.2023) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனங்களுக்கு இடையில் இடைவெளி விடாமல் சென்றமையே இந்த விபத்திற்கு காரணம் என நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வாகனங்கள் சேதம் அடைந்தாலும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.