யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்...!
Sri Lanka Police
Jaffna
Law and Order
By Shalini Balachandran
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 4 லட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.