திருமணமாகி 20 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் ஆசிரியை

Jaffna Nuwara Eliya Sri Lanka
By Harrish Jul 07, 2024 11:35 PM GMT
Harrish

Harrish

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(06.07.2024) இடம்பெற்றுள்ளது.

தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சபேஸ் பிரவீனா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

குறித்த ஆசிரியை நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்தவேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (06) அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி 20 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் ஆசிரியை | 20 Days After Getting Married Female Teacher Died

மேலும்,சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம்(07) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்...!