உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 18 பேர் பலி

India Accident
By Raghav Jul 10, 2024 08:22 AM GMT
Raghav

Raghav

இந்திய - உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (10) அதிகாலை 05.15 மணியலவில் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரில் வந்த பால் கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 18 பேர் பலி | 18 Killed In Bus And Truck Accident

விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன்,19 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உன்னாவ் காவலடதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW