குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் மாயம் : கிளிநொச்சியில் சம்பவம்

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
By Raghav Jun 29, 2024 10:30 PM GMT
Raghav

Raghav

கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

நீரில் மூழ்கி

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி - வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் மாயம் : கிளிநொச்சியில் சம்பவம் | 14 Year Old Boy Missing Drowned Iranimaduk Pond

இந்நிலையில், காணாமல்போயுள்ள சிறுவனை  தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery