பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
Pakistan
Weather
By Fathima
பாகிஸ்தான் - காஷ்மீரில், சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கில்கிட் - பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே காஷ்மீரில் இருந்து ஆட்டுமந்தைகளுடன் திரும்பிக்கொண்டிருந்த 35 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.
இந்த பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடரும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.