அனுர ஏன் சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்! கட்சி வழங்கியுள்ள விளக்கம்

Anura Kumara Dissanayaka Harini Amarasuriya
By Kamal Sep 03, 2024 01:43 AM GMT
Kamal

Kamal

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சொகுசு வாகனத்தில் பயணம் செய்வதற்கான காரணம் குறித்து கட்சி விளக்கம் அளித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

அனுர ஏன் சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்! கட்சி வழங்கியுள்ள விளக்கம் | Why Anura Using Luxary Vehicle Npp Explains  

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அனுரகுமார திஸாநாயக்க ப்ராடோ ரக சொகுசு வாகனத்தில் பயணம் செய்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஹரினியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

காரணம்

இதன்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அனுர இவ்வாறு ப்ரோடா ரக சொகுசு வாகனத்தில் பயணம் செய்வதாக ஹரினி தெரிவித்துள்ளார்.

அனுர ஏன் சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்! கட்சி வழங்கியுள்ள விளக்கம் | Why Anura Using Luxary Vehicle Npp Explains

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள நபரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது கட்சியின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தி பொதுமக்களின் பணத்தை துஸ்பிரயோகம் செய்யாது எனவும், கட்சி அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.