வானிலை மாற்றம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

Ampara Batticaloa Galle Matara Weather
By Fathima Dec 27, 2025 12:48 PM GMT
Fathima

Fathima

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

ஊவா மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை 

சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை மாற்றம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்! | Weather Forecast Next 36 Hours

சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு மாகாணத்தின் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாடு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வானிலை மாற்றம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்! | Weather Forecast Next 36 Hours

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.