பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Weather
By Mayuri Oct 06, 2024 11:30 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மின்னல் தாக்கம்

குறித்த சந்தர்ப்பங்களில், மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW