வானிலையில் அடுத்த சில நாட்களில் ஏற்படும் மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Weather
By Mayuri Aug 16, 2024 02:09 AM GMT
Mayuri

Mayuri

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வானிலையில் அடுத்த சில நாட்களில் ஏற்படும் மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

அதில் மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

வானிலையில் அடுத்த சில நாட்களில் ஏற்படும் மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW