நாங்கள் இறைவனிடம் சரணடைந்துவிட்டோம் - ஈரானிய அதிபர்

United States of America Iran Iraq World
By Vinoja May 06, 2026 02:35 PM GMT

முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் அடிபணிந்துவிட்டோம். வேறு யாரும் எங்களை அடிபணியும்படி கட்டாயப்படுத்த முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இறைவனிடம் சரணடைந்துவிட்டோம் - ஈரானிய அதிபர் | We Have Surrendered To God Iranian President

ஈராக் பிரதமர் அலி ஃபாலிஹ் அல்-ஜைதியுடனான தனது உரையாடலின் போதே அவர் இவ்வறு குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்கள் என்றும், தங்களை வேறு யாரும் அடிபணிய வைக்கவோ கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.