வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் பற்றிய தகவல்களையும் நேரடியாக அணுக அனுமதிக்கும் “Motor Vehicle Verification” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த சுங்கத் திணைக்களம் செயல்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய வாகனங்கள்
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தகவல்களை வழங்க எங்களிடம் ஒரு அமைப்பு உள்ளது. இந்த வாரம் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில், Motor Vehicle Verification செயலி மூலம் நுகர்வோர் வாகனம் தொடர்பான தகவல்களை நேரடியாக அணுக முடியும்.
இலங்கையில் வாகனம் வாங்க முயற்சிக்கும் நுகர்வோர், வாகனம் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தங்கள் வீட்டில் இருந்தபடியே சரிபார்க்க இந்த செயலி உதவும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |