கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்!
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து நேற்று கொழும்புக்கு ஏராளமான மரக்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் கொழும்பில் அது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொருளாதார நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொள்வனவு
அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் கரட், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு கிலோ கரட் 2900-3000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபா, கரட் 190 ரூபா, லீக்ஸ் 190 ரூபா, முள்ளங்கி 160 ரூபா, பீட்ரூட் 230 ரூபா, உருளைக்கிழங்கு 260 ரூபா, சிவப்பு உருளைக்கிழங்கு 280 ரூபா விலையிலும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் போஞ்சி விலை கிலோவின் விலை 1,000 ரூபாயை தாண்டியுள்ளது.
அதே நேரத்தில் கரட்டின் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.
விலையில் படிப்படியாக சரிவு
மீகொட மற்றும் வெலிசரை பொருளாதார மையங்களிலும் இதேபோன்ற நிலையே காணப்படுகிறது.
விதிவிலக்காக அதிக விலைகளிலிருந்து சில மரக்கறி வகைகள் தளர்ந்து வருகின்றன, மீகொட பொருளாதார மையத்தில், டிசம்பர் 8 அன்று காட்டப்பட்ட மொத்த விலைப் பட்டியல் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தைக் குறிக்கிறது.

ஒரு கிலோ போஞ்சி 1,100 முதல் 1200 வரை விற்பனையானது, இது விலையில் தொடர்ச்சியான உயர்வை பிரதிபலிக்கிறது. கோவாவின் விலை கிலோ ஒன்று 200 முதல் 250 வரை பதிவாகியுள்ளது. கரட்டின் விலை குறைந்து 200-250 ரூபாயாக ஆக இருந்தது.
இதற்கிடையில், கத்திரிக்காயின் விலை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது. சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மரக்கறிகள் உட்பட 73,000 கிலோ காய்கறிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.