செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மன்றத்தின் இறுதி நாள்! ரஷ்யாவை இலக்கு வைத்த உக்ரைனின் ஆளில்லா விமானங்கள்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Dharu Jun 06, 2026 05:51 PM GMT

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற முதன்மைப் பொருளாதார மாநாட்டின் இறுதி நாளான இன்று 6 அதிகாலையில் ரஷ்யா மீது உக்ரைன் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் பல ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தையே குறிவைத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

இது ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் அந்நகரின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, தற்போது ஐந்தாம் ஆண்டாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க தலைமையிலான இராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் சமீப மாதங்களில் ஒன்று மற்றொன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மன்றத்தின் இறுதி நாள்! ரஷ்யாவை இலக்கு வைத்த உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் | Ukraine S Drones Targeted Russia

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சந்திப்புக்கான முன்மொழிவை நிராகரித்த ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இது, "மீண்டும் போரைத் தேர்ந்தெடுக்கிறார்" என்று புதிரைக் குற்றம் சாட்டிய ஜெலென்ஸ்கியின் விமர்சனத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.