யாழ். மானிப்பாய் பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது

By Thulsi Apr 29, 2024 08:52 AM GMT
Thulsi

Thulsi

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பாலை மற்றும் முதிரை குற்றிகள் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீடொன்றில் சோதனை நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முதிரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் பொழுது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

கைது செய்யபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.