குவைத்தில் பரபரப்பு: ஈரானை ஆதரித்த செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!
குவைத்தின் அரசுத் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ஷைனப் தஸ்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகவும், ஈரானுக்கு ஆதரவாகவும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய இந்த வழக்கில், ஈரானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷைனப் தஸ்திக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருத்துச் சுதந்திர ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.