இலங்கையில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka
By Mayuri Aug 14, 2024 01:55 AM GMT
Mayuri

Mayuri

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.   

2012 - 2013 தேவைப்பட்ட பணம்

அதற்கமைய 2012 - 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண பெறுமதி தொடர்பில் வெளியான தகவல் | Tripling Of The Value Of Money To Meet Basic Needs

அதேபோன்று 2013 இல் 5,223 ரூபாவாக காணப்பட்ட இப்பெறுமதி 2016இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உயர்வடைந்தது.

பணவீக்கம் அதிகரிப்பு

அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது.

அதன்விளைவாக ஒருவர் அவரது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி 15,970 ரூபாவாக மிகையான அளவினால் அதிகரித்தது.

இலங்கையில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண பெறுமதி தொடர்பில் வெளியான தகவல் | Tripling Of The Value Of Money To Meet Basic Needs

மேலும் இப்பெறுமதி இவ்வாண்டு ஜனவரியில் 18,350 ரூபாவாகவும், மே மாதத்தில் 17,608 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றன. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW