கனடாவிலிருந்து திருகோணமலைக்கு கிடைத்த நற்செய்தி! இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்
கனடாவின் "என் கடமை" நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கிண்ணியா மீடியா போரத்தின் இல்லத்தில் இன்று(12) காலை நடை பெற்றது.
கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்தி, திருகோணமலை மீடியா போரத்தில் தலைவர் எச்.எம்.ஹலால்தீன், மற்றும் கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளரின் பாரியார், இலங்கைக்கான என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளர் ஜீவேந்திரன் முதலானோர் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
முக்கிய கலந்துரையால்
மூதூர், சம்பூர், பட்டி திடல், கணேசபுரம், சேனையூர், பாட்டாளிபுரம் முதலான இடங்களில் வசிக்கும் மீள்குடியேற்ற மக்களுக்கான வாழ்வாதார வசதிகள், கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவிகள், விதவை, அனாதைகளுக்கான உதவிகள் வழங்குவது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டன.
ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை நவீன உலகத்திற்கு ஏற்ப அவர்களை ஈடுபடுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ளல், ஊக்கி வித்தல், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் முதலான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் இதன்போது மீடியா போரத்தின் தலைவரினால் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




