மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார இசை நிகழ்ச்சி!
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசை போட்டியில் திருகோணமலை முதல் இடம் பெற்றுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்காக தேசிய மட்ட இசை நிகழ்ச்சி நேற்று (20) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலில், கிழக்கு மாகாண அளவிலான முதல்கட்ட போட்டிகள் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.
தேசிய கலாசார இசை நிகழ்ச்சி
இதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், சமூக சேவைகள் திணைக்களம் வழங்கிய தலைப்புகளுக்கேற்ப இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், இந்த போட்டியில், திருகோணமலை மாவட்டம் 1ஆம் இடத்தை பெற்றதோடு, தேசிய மட்டத்தில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் மேடைக்கு கொண்டு வரப்பட்டதோடு, அவர்களின் சமூக பங்களிப்பு மற்றும் தனித்துவமான திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
அத்தோடு இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட சமூக சேவை இணைப்பாளர் த.பிரணவன் மரண்கடவெல உத்தியோகத்தர் அ.செல்வகுமார் குச்சவெளி உத்தியோகத்தர் ம.குகதாசன் பட்டிணமும் சூழலும் உத்தியோகத்தர் கௌரிதாஸ் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











